Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

அழைப்பு !

பாடி மகிழும் பறவைகளை
நாடி வரும் தென்றலே!
ஆடி மகிழும் மயில்களை
தேடிச் செல்லும் மேகமே !
ஓடி மகிழும் ஆற்றினை
சென்று அடையும் மழைகளே !
கூடி மகிழும் பூக்களை
உரசும் வண்ணப் பூச்சிகளே !
தேன் சிந்தும் இதழ்களை
வென்று வரும் கீதங்களே !
என்னவனின் நினைவுகளை
சுமந்து நிற்கும் சேதிதனை
விரைந்து சொல்ல வாருங்களேன்
என்து இனிய மன்னவனுக்கு !
கைதுறப்பு